உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 25 மே, 2014

பிரபாகரம்



அறவழிப் போராட்டம்

நசுக்கப்பட்டது

கவிஞன் தாக்கப்பட்டான்

அரசியலாளன்

தூக்கியெறியப்பட்டான்

அவலங்களின்

கொதிப்பு

கத்திமுனையில்
தீர்ப்போமென

கங்கணம்

கட்டி நின்றது

சிறிலங்காவின்

அரச பயங்கர வாத

இயந்திரம்

ஆயுத தாரிகளின்

கொட்டத்தில்

அரச படைகளின்

அகோரப்

பிடியில் தமிழ்த்தேசியம்

சிவகுமாரன்

இன்பம்

போன்ற இளையவர்

மாணவர் இயக்கத்தினர்

தோற்றுவித்தனர்

புதிய வடிவத்தை

சிறைபிடிக்கப்பட்டான்

காணாமல் போனான்

இன்னபம்

நஞ்சையுண்டான்

நம் சிவகுமாரன்

கண்ணீரோடு

அலைந்தாள்

தமிழ்த்தாய்

தம்பியர் எழுந்தார்

அதனுள்

ஒரு தீப்பொறி

தம்பீஇ! தம்பீஇ!

தம்பி

தீவிரப்

போர்க்கோலமாய்

தம்பிமார் கூடினர்

புதிய புலிகளாய்

கூடவே புயல்களும்

சுதந்திரப் பறவைகளாய்

குப்பியும் மாலையுமாய்

கிட்டுவும் குட்டிசிறியும்

சீலனும் விக்டரும்

சந்தோசமும் பொன்னமானும்

என ஆளுமையின்

வடிவங்கள்

ஒரு சேற இயங்கிய

தமிழியக்கத்தின்

புதியதொரு தொடக்கம்

புமையின் உருவாக்கம்

வீரத்தின் வரலாறு

வரிப்புலிகளாகவும்

வான்புலிகளாய்

மண்ணிலிருந்து விண்வரை

தாழ்த்தப்பட்ட தேசியங்களுக்கும்

முன்னெடுத்துக்காட்டு

பிரபாகரன்

ஒரு காலப்பெயர்

உறுதியின் உறைவிடம்!